ஊரடங்கு பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு ரூ.200 கோடி செயல்திட்டம்.. முதல்வர் அறிவிப்பு

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி முடிகிறது. இதை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது :
கொரோனா பரவாமல் தடுக்கும் பணியை மாவட்டக் கலெக்டர்கள் இடைவிடாது கண்காணிக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் இலவச முகக் கவசங்கள் முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு கட்டமாக தளர்த்தி வருகிறது. அனைத்து தொழில்களும் தொய்வில்லாமல் நடத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டிலேயே இந்த நேரத்திலும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவையான அளவுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.முன்களப் பணியாளர்களுக்கும், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.இதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds