விவசாயிகள் திட்டத்தின் ரூ.110 கோடி ஊழலில் அதிமுகவினருக்கு தொடர்பு.. கனிமொழி குற்றச்சாட்டு..

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்குக் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை நேரடியாகச் செலுத்தப்படும். ஆனால், அந்த விவசாயிகளின் நில ஆவணங்களைப் பரிசோதித்துச் சரியான ஆட்களைத் தேர்வு செய்து ஒப்புதல் அளிக்கும் பணி, தமிழக அரசிடம் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் பணியை வருவாய்த் துறையில் உள்ள வி.ஏ.ஓ.க்கள் செய்து வந்தனர்.

ஆனால், அதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, மாநில அரசின் வேளாண்மைத் துறையிடமும் பணியை ஒப்படைத்தனர். இந்நிலையில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த திட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கி, பணம் சுருட்டப்பட்டது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது வரை ரூ.110 கோடி இப்படி போலி ஆசாமிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதாகவும், அவற்றை மீட்டு வருவதாகவும் மாநில அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த ஊழலில் அதிமுக முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொது முடக்கக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத் தானா?
5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :