அதிமுகவை கைப்பற்ற தினகரன் ஏன் கட்சி தொடங்க வேண்டும்? - டி.ராஜேந்தர் கேள்வி

தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும். இதன் பின்னணியில் சதி இருக்கிறது என்று லட்சிய திமுக நிறுவனர் தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mar 20, 2018, 09:20 AM IST

தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும். இதன் பின்னணியில் சதி இருக்கிறது என்று லட்சிய திமுக நிறுவனர் தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியிருப்பதை வரவேற்கிறேன். குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைவரும் போராட வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் மாற்று அரசு. எதற்கும் விடை காணாத அரசு. அதிமுகதான் இப்படியென்றால், எதையும் தட்டிக் கேட்க இயலாமல் இருக்கிறது எதிர்க்கட்சி. கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால், இப்படி நடக்குமா? அவரது திமுக வேறு; ஸ்டாலினின் திமுக வேறு.

தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும். இதன் பின்னணியில் சதி இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அதிமுகவை கைப்பற்ற தினகரன் ஏன் கட்சி தொடங்க வேண்டும்? - டி.ராஜேந்தர் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை