கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு.

நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படும். கடந்த மே 1ஆம் தேதி நடக்கவேண்டிய கிராம சபை கூட்டம் கொரானா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கொரானா தொற்று பரவலை காரணம் காட்டி கிராமசபை கூட்டங்களை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருந்தாள் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததாகவும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தே கிராமசபை கூட்டங்கள் கடைசி நேரத்தில் தமிழக அரசு தடை செய்து விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போட்டி கிராமசபை கூட்டங்களில் நடத்தினர் அதில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனிடையே கொரானா ஒரு டங்கை கட்டி கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. எனவே ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி அருண் அய்யனார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் விசாரிக்க இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds