சிறுமியிடம் சில்மிஷம் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி..!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி , தனது தாயாரின் சம்மதத்துடன் கடந்த சில ஆண்டுகளாகப் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஜாமீன் கோரி நாஞ்சில் முருகேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில்,2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு சோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.முதற்கட்ட விசாரணையின் போது இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே தனது ஜாமீன் மனுவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன் மனுதாரர் தரப்பில் ஜாமீன் கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :