திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Mar 23, 2018, 07:58 AM IST

திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதால், இன்று முதல் திரையரங்குகள் செயல்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்கள், 8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையி, திரையரங்கு உரிமையாளர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதன் எதிரொலியாக, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், இன்று முதல் திரையரங்குகள் வழக்கம்போல் செயல்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை