சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..

corona death count rising in 6 districts in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 12, 2020, 10:16 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் இந்த மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.11) 5015 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 56,385 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5005 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 2,039 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 65 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,252 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1250 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 258 பேருக்கும், திருவள்ளூர் 198, காஞ்சிபுரம் 158, கோவையில் 389, ஈரோடு 163, நீலகிரி 128, நாமக்கல் 159, சேலம் 284, தஞ்சாவூர் 181, திருவண்ணாமலை 172, வேலூர் மாவட்டத்தில் 135 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 12 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 82,014 பேருக்கும், செங்கல்பட்டில் 39,347 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,741 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 3415, செங்கல்பட்டு மாவட்டத்தில் 597, திருவள்ளூர் 583, கோவை 491, மதுரை 398 மற்றும் சேலம் மாவட்டத்தில் 272 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

You'r reading சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை