கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு 14ம் தேதி வாய்ப்பு...!

கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 16 லட்சத்து 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது இந்த தேர்வை நடத்தக்கூடாது என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்வு நடைபெறும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களால் தேர்வு எழுத முடியவில்லை என்றும், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்ட போது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தவேண்டும் என்றும், அவர்களது விடைத்தாள்களைத் திருத்திய பின்னர் முடிவுகளை 16ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் தேர்வு நடைபெறும் போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :