கொரோனா : ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ராஜேந்திர இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ரிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூச்சுத் திணறல் அதிகரித்ததால் அக்டோபர் 1ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் , செயற்கை சுவாசம் வழங்கும் எக்மோ சிகிச்சைக்குப் புகழ்பெற்ற சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்தார். ஜகர்நாத் மகாடோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனடியாக சென்னைக்குக் கொண்டு செல்ல வேண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து அமைச்சர் ஜகர்நாத் மகாடோ தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார்.ராஞ்சி விமான நிலையத்தில் அமைச்சர் ஜகர்நாத்தை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பாடல் பட்ரலேக் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜகர்நாத் சிகிச்சை பெற்று வந்தார், ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே , மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிறந்த சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.ஜகர்நாத் மகாடோவுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக உள்ளதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :