லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்து சான்றிதழ் பெற்ற மூதாட்டி...!

தமிழக அரசுப் பணிகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதை உணர்த்தி உள்ளது இந்த சோகமான நிகழ்வு. வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவர் லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் எனக் கூற, திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை எனப் பிச்சையெடுத்து அதிகாரிகளின் மனசாட்சியின்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி ( 63). இவரது கணவர், மகன் ஏற்கனவே காலமான நிலையில், மருமகளும் கடந்த மாதம் இறந்து போனார். இவரது மகனுக்கு 2 பெண் குழந்தைகள் . இதனால், தனது சொத்துக்களை, பேரக்குழந்தைகளின் பெயரில் மாற்ற ஜோதி மணி முடிவு செய்தார். இதற்காக மாத்துார் கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால்,லஞ்சம் கொடுக்காததால் சான்றிதழ் கிடைக்கவில்லை . கிராம நிர்வாக அலுவலரை ஜோதிமணி நேரடியாகச் சந்தித்து இதுபற்றி கேட்க 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் உடனடியாக தருவதாகக் கிராம நிர்வாக அலுவலர் சொல்லியிருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி மறுநாள், தனது பேரக்குழந்தைகளுடன் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்குச் சென்றார். வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுக்க பணம் தேவை என ஒரு அட்டையில், எழுதி தாலுகா அலுவலக வாயிலின் முன்பு அமர்ந்து பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைக்கண்ட பலர், அவருக்குப் பணம் வழங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தார் தாசில்தார் மாரிமுத்து, ஜோதிமணியுடன் பேசி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மேலும், விஏவி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தார்.எடுத்து ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்றார். உறுதியளித்த அப்படியே தாசில்தார் ஜோதி மணிக்கு மறுநாள் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :