தி.நகரில் உள்ள பிரபல கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை ?
தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் அன் கோ உள்ளிட்ட கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, தி.நகரில் ஜவுளி, நகை உள்பட அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் அதிகளவில் நிறைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக, சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் மட்டும் ரூ.40 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதைதொடர்ந்து, சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் உள்ள கடைகளில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல், தி.நகரில் உள்ள வசந்த் அன் கோ கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனையால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தி.நகரில் உள்ள பிரபல கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை ? Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News