ஒரு மணிநேரம் பொறுங்கள்... என் காதலன் வருகிறார்! - திருமணத்தில் ஷாக் கொடுத்த மணப்பெண்

bride stopped her wedding near ooty

by Sasitharan, Oct 31, 2020, 18:41 PM IST

நீலகிரி மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரியதர்சினி. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி திருமணம் இன்று நடைபெற இருந்தது. உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் எளிமையான முறையில் நடக்கத் தொடங்கியது. மணமகன், மணப்பெண் மணமேடையில் இருக்கும்போது தாலி கட்டுவதற்கு முன்பு அவர்களின் மரபு படி மணப்பெண்ணிடம் சம்மதம் கேட்பது வழக்கமாம். அதன்படி மணப்பெண் பிரியதர்சினியிடம் தாலி கட்டும் முன், சம்மதம் கேட்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு முறை கேட்டபோது, அமைதி காத்த பிரியதர்ஷினி மூன்றாம் முறை கேட்டபோது, ``சம்மதமில்லை'' எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கூடவே, ``ஒரு மணி நேரம் பொறுத்து கொள்ளுங்கள். என்னை திருமணம் செய்து கொள்ள என் காதலன் வருகிறார். எனக்காக திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர் என் காதலன். அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். இந்த திருமணம் நடந்தால், அவருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகிவிடும்" எனக் கூறி அடுத்த அதிர்ச்சியை தந்திருக்கிறார். இவர் இப்படி சொல்லவும் மண்டபத்தில் இருந்தவர்கள் அவரை வசைபாடுகின்றனர். இந்த வீடியோ இப்போது பரவலாக பரவி வருகிறது.

You'r reading ஒரு மணிநேரம் பொறுங்கள்... என் காதலன் வருகிறார்! - திருமணத்தில் ஷாக் கொடுத்த மணப்பெண் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை