பணிக்கு சென்ற செவிலி பிணவறையில் பிணமாக கிடந்த பரிதாபம் - மரணத்துக்கு காரணம் என்ன?

பணிக்கு சென்ற செவிலியர் தாயம்மாள் மணமேல்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் பிணமாக கிடந்ததை அடுத்து அப்பகுதி போர்களமானது.

Mar 29, 2018, 08:33 AM IST

பணிக்கு சென்ற செவிலியர் தாயம்மாள் மணமேல்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் பிணமாக கிடந்ததை அடுத்து அப்பகுதி போர்களமானது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள விஜய் என்ற தனியார் மருத்துவமனையில் முத்துக்குடா கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜா மகள் தாயம்மாள் (24) செவிலியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் பிணமாக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து கதறி துடித்த பெற்றோரும், உறவினர்களும் மணமேல்குடி அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். பணிக்கு சென்ற செவிலியர் தாயம்மாள் எப்படி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டார் என கேள்வி எழுப்பினர்.

இது குறித்து அவருடன் பணிபுரிந்த சில பெண்களிடம் கேட்டபோது, தாயம்மாள் மருத்துவமனையிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனை அறிந்த டாக்டர்.முத்து, செவிலியர் தாயம்மா உடலை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

பிணவறையில் கிடத்தப்பட்டுள்ள செவிலியர் தாயம்மாள்

ஆனால் உறவினர்களோ, ’தாயம்மாள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அவளை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடுகிறார்கள். அதனால் விஜய் மருத்துவமனை நிர்வாகி டாக்டர்.முத்து மீதும் உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து புகார் அளித்தனர்.

புகார் குறித்து விசாரிப்பதாக கூறிய மணமேல்குடி காவல் துறையினர் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் நேரம் ஆனதால் கொதித்தொழுந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அதன் பிறகு டாக்டர்.முத்து, ஊழியர்கள் மாரிமுத்து, மற்றும் ஒருவர் என மூன்று பேரும் கைது செய்யப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பிரேதப் பரிசோதனைக்கு வெளியூர் மருத்துவர்கள் வரவேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கை வைத்தனர்.

‘தாயம்மாள் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார் என்றால், வீட்டிற்கு தகவல் சொல்லாமல், எதற்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றார்கள்’ என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பணிக்கு சென்ற செவிலி பிணவறையில் பிணமாக கிடந்த பரிதாபம் - மரணத்துக்கு காரணம் என்ன? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை