10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: 2 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இயின் கீழ் 10ம் மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற 12ம் வகுப்புக்கான பொருளாதார பாடம் மற்றும், 10ம் வகுப்புக்கான கணிதப் பாடத்திற்கான கேள்வித்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், கேள்வித்தாள் கசியவில்லை என சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கேள்வித்தாள் வெளியனதாக கூறப்படும் இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில், “12ம் வகுப்பு பொருளாதாரவியல் மற்றும் 10ம் வகுப்புக்கான கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என அதில் தெரிவித்திருந்தது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: 2 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு Originally posted on The Subeditor Tamil
More Akkam pakkam News