இது தமிழகமா, வடமாநிலமா?.. துப்பாக்கிச் சூடு குறித்து ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை சத்திரப்பட்டி சேர்ந்த இளங்கோவன் என்பவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடம் தனக்கு சொந்தமானது என தொழிலதிபர் நடராஜன் விவசாயி இளங்கோவனிடம் தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக நடராஜன் பழனி முனிசிபல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இளங்கோவனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து நடராஜன் திண்டுக்கல் சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் அதிலும் இளங்கோவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த கடந்த ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் மேல் முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த இடம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், அப்போது திடீரென நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி மூன்று தடவை சுட்டுள்ளார். இதில் சுப்பிரமணிக்கு மார்பிலும் பழனிச்சாமிக்கு வலது தொடையிலும் குண்டு பாய்ந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயக்கம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு தமிழகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! இது தமிழகமா, வடமாநிலமா? தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம். காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :