போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று இரவு இளைஞர்கள் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், மெரினாவில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இளைஞர்கள் சிலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து போராட்டத்தில் குதித்தவர்களை கைது செய்தனர். இதனால், மெரினாவில் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. மெரினா சர்வீஸ் சாலைகள் முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன. இங்குள்ள நடைபாதையில் நடைப்பயற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News