கோவில் அறங்காவலர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர்
தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை அந்தந்த கோவில்களில் முன் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும் உரிய முறைகளைப் பின்பற்றி என் மனம் மேற்கொள்ளப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் , அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டுத் தான் கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்படுகின்றனர். கோவில்களில் அறல்காவலர் குழு நியமனம் செய்ய, 21 மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் , பல குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள், வழக்கு உள்ளவர்கள் கூட அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய, அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள். பெயர் பட்டியல், கல்வி , ஆன்மிகத்தில் அவருக்குள்ள ஈடுபாடு, குற்ற சம்பவம் மற்றும் வழக்குகளில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்த முழு விவரங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :