தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் வைபவ் கப்பலில் கடற்படையினர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு கப்பல் வந்து கொண்டிருந்ததை கண்டு அதை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அந்த கப்பல் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றது தெரியவந்ததையடுத்து. சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 6 பேர் இருந்துள்ளனர். அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இலங்கை பதிவெண் கொண்ட அந்த கப்பலில் கடலோர காவல்படையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த கப்பலில் இருந்தவர்களிட ம் 100 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள், சிந்தடிக் மெத்தலின் எனும் அதி பயங்கர போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட அந்த கப்பல், அந்த கப்பல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக தூத்துக்குடி கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது பிடி பட்டுள்ளது. கப்பலில் இருந்த 6 பேரும் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட நபர்கள் மற்றும் கப்பல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் ஆகியவை நாளை மதியத்திற்குள் தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
5-killed-in-auto-accident-near-thoothukudi
தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
thoothukudi-road-blockades-in-several-places-demanding-drainage-of-stagnant-rain-water
தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்
thoothukudi-rape-case
மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்தது போக்ஸோ சட்டம்.. நியாயம் கேட்டு தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
release-of-examination-schedule-for-10th-and-12th-class-within-10-days-minister-announced
இன்னும் 10 நாளில் 10, 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு: செங்கோட்டையன் தகவல்
vandu-murugan-style-challenge-dmk-personal-vehicles-damage
வண்டு முருகன் பாணியில் சவால் : திமுக பிரமுகர் வாகனங்கள் துவம்சம்
supreme-court-refused-reopening-of-sterlite-copper-plant-at-thoothukudi
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை.. சுப்ரீம் கோர்ட் மறுப்பு..
mysterious-ship-caught-near-thoothukudi-100-kg-of-heroin-seized
தூத்துக்குடி அருகே மர்ம கப்பல் சிக்கியது: 100 கிலோ ஹெராயின் பறிமுதல்
the-court-ordered-the-placement-of-boards-on-archeological-sites-in-public-places
மக்கள் கூடும் இடங்களில் தொல்லியல் பழமை வாய்ந்த இடங்கள் குறித்து போர்டுகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு
10-crore-worth-of-red-wood-confiscated-in-thoothukudi
தூத்துக்குடியில் ரூ 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
kandasashti-festival-started-this-morning-at-the-thiruchendur-subramania-swamy-temple
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
Tag Clouds

READ MORE ABOUT :