முட்டைக்கோஸ் கறியை ருசி பார்த்த முதல்வர்

வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று சிலர் இதை வர்ணித்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடர்கிறார் முதல்வர் பழனிசாமி. நாகை மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று இரவு வேளாங்கண்ணிக்கு வந்த அவர், இன்று காலை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தரிசனம் செய்தார், பின்னர் நாகூர் புறப்பட்டார். அங்கு புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் தொழுகையிலும் ஈடுபட்டார்.

நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கருங்கண்ணி என்னுமிடத்தில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்டார். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆயிரம் ஹெட்டேரில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை அவர் பார்வையிட்டபோது விவசாயிகள் நெற்பயிரை எடுத்து வந்து முதலமைச்சரிடம் காட்டினர். வேதாரண்யம் அருகே உள்ள பழங்கள்ளிமேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 364 பேருக்கு அரிசி, பருப்பு , வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் திருவாரூர் மாவட்டம், மற்றும் மயிலாடுதுறை பகுதிகளுக்கு சென்று மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 160 குடும்பங்களைச் சேர்ந்த 360 பேர் அரசு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமிற்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டரிந்தார். பின்பு முகாமில் உள்ள 15 குடும்பத்தினருக்கு அரிசி, பருட்பு,புடவை, வேஷ்டி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பின் முகாமில் தங்கி இருக்கும் நபர்களுக்கு உணவு சமைக்கும் கூடத்திற்கு சென்றார்.

சமைக்கப்பட்ட உணவு பொருட்களின் தரத்தை கேட்டறிந்தார். சாம்பாரில் என்னென்ன காய்கறி சேர்த்து எங்கள் என்ன கறி சமைத்து இருக்கிறீர்கள்? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டே வந்தார் முட்டைக்கோஸ் பொரியல் வைத்திருக்கிறோம் என்று சமையல்காரர் சொல்ல அதை கொஞ்சம் கொடுங்க.. என்றவர் அதை வாங்கி சுவைத்துப் பார்த்தார். நல்லா இருக்கு .. காய்கறிகள் நிறைய சேர்த்து நல்ல தரமான உணவாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :