யாரோ மோடிக்கு சூனியம் வச்சுட்டாங்க - விவசாயி விநோத போராட்டம்

காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கைகள் காதில் விழாத வகையில் பிரதமர் மோடிக்கு சூனியம் வைத்து விட்டதாக கூறி அறந்தாங்கி விவசாயி ஒருவர் வினோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Apr 6, 2018, 22:13 PM IST

காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கைகள் காதில் விழாத வகையில் பிரதமர் மோடிக்கு சூனியம் வைத்து விட்டதாக கூறி அறந்தாங்கி விவசாயி ஒருவர் வினோத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் அங்குள்ள கடை வீதியில் உள்ள கடைவாசலில் பதாகை வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனி நபராக உண்ணாவிரதம் தொடங்கினார்.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அவர், “நமது கோரிக்கை எதுவும் மோடி காதுக்கு கேட்கவில்லை, அவருக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே தான் நாம் கதறுவது அவருக்கு கேட்கவில்லை.

அதனால் 4வது நாளான வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறேன். சுடுகாட்டிலிருந்து துர்தேவதைகளிடம் பேசி மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை அகற்றி, நம் கோரிக்கைகளை மோடி காதுக்கு கொண்டு போகும் போராட்டம் நடத்த உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading யாரோ மோடிக்கு சூனியம் வச்சுட்டாங்க - விவசாயி விநோத போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை