சுனாமி பேரலை தாக்கிய 16வது ஆண்டு தினம் அனுசரிப்பு.. மக்கள் கண்ணீர் அஞ்சலி..

சுனாமி தாக்கிய 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கூடி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளியாக பதிவானது. இந்த பூகம்பத்தின் நீட்சியாக இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது சுனாமியாக உருவெடுத்தது.

கடந்த 1964ம் ஆண்டில் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பெரும் புயல் தாக்கி, அந்த நகரமே அழிந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு புயல், சுனாமி தாக்குதலை மக்கள் பார்க்கவில்லை. அதனால், 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கிய போது அதற்குச் சுனாமி என்ற பெயர் உள்ளது மக்களுக்குப் பரிச்சயமானது.

சுனாமியால் சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்களில் கடல் நீர் புகுந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி என்று கடலோர மாவட்டங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் 26ம் தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சுனாமியால் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள், அவர்களின் புகைப்படங்களைக் கடற்கரையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலில் பூக்கள் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்துகின்றனர்.அதே போல், இன்று சுனாமி வந்த 16வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரை மற்றும் கன்னியாகுமரி, கடலூர் கடலோர கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :