ஜல்லிக்கட்டு நடத்த எதற்கு மல்லுகட்டு?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு காளை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜனவரி மாதம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் நடக்க உள்ளது . இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதிதாக பல விதிகளை அரசு வெளியிட்டது. இதற்கு காளை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஜல்லிக்கட்டு களத்திற்கு ஒரு காளை மாட்டுடன் காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் முதல் ஆறு பேர் வந்த நிலையில் இனி இருவருக்கு மட்டுமே அனுமதி , அந்த இருவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இது ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான காளை மாடுகள் தயாராகி வருகின்றது.

நாள்தோறும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, உரிப்பாய்ச்சுதல், சத்தான உணவு வழங்குதல் என காளை உரிமையாளர்கள் தீவிரமாக தங்களது காளைகளை தயார் படுத்தி வருகின்றனர். ஏற்கனவே காளை மாடுகளை தயார் படுத்துவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வரும் காளை உரிமையாளர்கள் தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா பரிசோதனைக்குச் என்றால் அதற்கும் கூடுதலாக கஷ்டப்பட வேண்டியுள்ளது என்றும், எனவே தமிழக அரசு இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது சாத்தியமில்லை எனவும் காளை உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :