காவிரி பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? - பாய்ந்த சீமான்

காவிரி பற்றி உங்களுக்கு என்னவென்றே தெரியவில்லை. கால் ஏக்கர், அரை ஏக்கர், முழு ஏக்கர்னு சொல்கிறீர்கள். உங்களுக்கு காவிரி பிரச்சினை பற்றி என்ன தெரியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Apr 11, 2018, 19:48 PM IST

காவிரி பற்றி உங்களுக்கு என்னவென்றே தெரியவில்லை. கால் ஏக்கர், அரை ஏக்கர், முழு ஏக்கர்னு சொல்கிறீர்கள். உங்களுக்கு காவிரி பிரச்சினை பற்றி என்ன தெரியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்தது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டம் நடந்தி வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி காரணமாக, காவிரிக்காக நடைபெற்று வரும் போராட்டம் திசை திருப்பக்கூடும் எனக் கூறி சில அரசியல் கட்சிகள் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது காவலர்கள் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், “ரஜினிகாந்த் அதை பார்த்தாரா? நீங்கள் பார்த்த காணொலியில் நான் தாக்குவதாக பதிவாகி உள்ளதா? அங்கிருந்தவர்கள் தான் தாக்கினார்கள். வெற்றிமாறன் மீது எதற்கு தாக்குதல் நடத்த வேண்டும். இயக்குநர் களஞ்சியம் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

100, 150 பேருக்கு மேல் தாக்கப்பட்டனர். போலீஸார் சொன்னது நீங்கள் எங்களுடன் ஒத்துழையுங்கள் என்கிறார்கள். அமைதியாகத்தான் போகிறோம். அப்போது தாக்குகிறார்கள். அப்போது நான் போன பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார்கள். நான் அங்கு போய் தடுத்து நிறுத்தினேன். அந்த முழு காணொளியை போடவில்லை.

ரஜினிகாந்துக்கு நாங்கள் சொல்வது, நாங்கள் களத்தில் இறங்கி போராடுகிறோம், உங்களை மாதிரி மவுனப் போராட்டம் நடத்தியவர் கருத்துக்கூற வேண்டியது இல்லை. காவிரி பற்றி உங்களுக்கு என்னவென்றே தெரியவில்லை.

கால் ஏக்கர், அரை ஏக்கர், முழு ஏக்கர்னு சொல்கிறீர்கள். உங்களுக்கு காவிரி பிரச்சினை பற்றி என்ன தெரியும். பல மாவட்டங்களுக்கு குடிக்க நீர் இல்லை. உங்களுக்கு போரடித்தால் இமயமலைக்கு செல்லுங்கள், இங்க வந்து ட்விட்டரில் கருத்து போட்டு காமெடி பண்ணக் கூடாது.

ஆந்திராவில் 20 அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக்கொன்றபோது இவர் எங்கே போனார். சில நாட்களுக்கு முன் திருச்சியில் உஷா என்ற பெண் கணவனுடன் செல்லும் போது காவல் அதிகாரியால் எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்தார் அது பற்றி கருத்து கேட்ட போது கையெடுத்து கும்பிட்டு விட்டு நழுவி சென்றீர்களே அப்போது எங்கே போனது உங்கள் குரல்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவிரி பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? - பாய்ந்த சீமான் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை