மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயமாக உருவான பின்னணி!

தமிழகத்தில் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 இடங்களை புலிகள் சரணாலயமாக உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1973-ம் ஆண்டு புலிகளின் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகியவை இடங்கும். புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே புலிகள் காப்பகத்தின் முக்கிய நோக்கம்.

இதற்கிடையே, தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிர் காப்பகமும், மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகமும் புலிகள் காப்பகமாக மாற்ற கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள், டிஎன்ஏ மாதிரிகள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு 2017 - 2018-ம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தப் பகுதிகளில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் மூன்று ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என கண்டறியப்பட்டது. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டது.

இதனை பரீசிலித்த மத்திய அரசு, தற்போது, மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு இடங்களை புலிகள் சரணாலயமாக உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசியப் புலிகள் பாதுகாப்பு கழகமும் அனுமதியளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் புலிகள் சரணலாயத்தின் எண்ணிக்கை 51 ஆகவும், தமிழகத்தில் 6 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரு காட்டுயிர் சரணலாயத்தை புலிகள் காப்பாகமாக மாற்றும்போது விலங்குகள் உணவு குறித்து கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, அதாவது ஏராளமான காட்டு மாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் இந்த சரணாலயத்தில் இருப்பதால் புலிகளின் உணவு தேவையும் ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :