நாமக்கல் : அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு அறிவித்த படி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆலாம்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.. அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு அந்த வழியை பொதுமக்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ம் தேதி இதே பிரச்சினைக்காக விவசாயிகள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

உயர் மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கு ஒரு கி.மீட்டருக்கு அதிகபட்சம் 4 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றவும், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதும் விவசாயிகள் கோரிக்கைகளாகும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின நிறுவனர் ஈசன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட போலீசார் அனுமதிக்காததால் விவசாயிகள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசின் சார்பில் எவ்வளவு நிவாரணம் தொகை வழங்குவதாக அறிவித்த தொகையை அரசு வழங்கிவிட்டது. இரண்டு மூன்று முறை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட தொகை வரவில்லையோ அந்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி உடனடியாக பெற்றுத் தருகிறேன் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டியல் வழங்கப்படவில்லை. பட்டியல் வந்ததும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்று உள்ளனர். என தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :