அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

by Balaji, Feb 27, 2021, 19:54 PM IST

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர்த்து மற்றவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர் 196 பேர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அந்த 196 பேரும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களை நியமிக்கக் கோரி பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே என ஐகோர்ட் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.இதைத்தொடர்ந்து தேர்வில் கலந்து கொண்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கூறி மதுரை கிளையில் மேலும் பலர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்வில் முறைகேடு நடந்ததால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வில் பங்கேற்ற யாருக்காகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

You'r reading அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை