தேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்

by Balaji, Mar 1, 2021, 17:22 PM IST

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் தகுதி நமது கட்சிக்கு உண்டு. எனவே எந்த இடத்திலும் தேமுதிக தலைகுனியாது என்று விஜயகாந்தின் மைந்தர் விஜயபிரபாகரன் பேசினார். பெரம்பலூரில் தேமுதிகவின் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் விஜயகாந்தின் மைந்தர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.அதிமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா? எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்க விஜயபிரபாகரனோ அதைப்பற்றி கவலைப்படாமல் அந்த கூட்டத்தில் சாட்டையை சுழற்றி இருக்கிறார்.

அவர், சட்டமன்ற தேர்தலில் 2 3 4 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் திறன் நமது தேமுதிக கட்சிக்கு இருக்கிறது. அமையவுள்ள புதிய சட்டமன்ற அவையில் கேப்டனின் குரல் நிச்சயம் ஒலிக்கும். கூட்டணி குறித்து தொண்டர்களாகிய நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம். நீங்கள் நினைப்பதைத் தான் நாங்கள் நடத்திக் காட்டுவோம். எந்த சூழ் நிலையிலும் தேமுதிக தலை குனிந்து போகாது. நிச்சயம் அரசியல் அரங்கில் நமக்கான இடத்தை நாம் பெற்றே தீருவோம் என்று பேசியிருக்கிறார். அதிமுக - தேமுதிக தலைமைகளுக்குள் மத்தியில் தொகுதி பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில் பெரம்பலூர் வந்த விஜயபிரபாகர் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading தேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை