மார்ச் 13ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு.

by Balaji, Mar 9, 2021, 19:16 PM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நடைபெற்ற செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. நூல் மற்றும் துணி சீராக கிடைக்கும் வரை, நூல் மற்றும் துணி ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்யவேண்டும் என பிரதமர் அலுவலகம், மத்திய ஜவுளி அமைச்சகம், மற்றும் வர்த்தக அமைச்சகத்திடம் கோரிக்கை மனு அளிப்பது. மத்திய ஜவுளி அமைச்சரை சந்தித்து திருப்பூரின் இன்றைய தொழில் சூழ்நிலையை விளக்கி உடனே நடவடிக்கை எடுக்க கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்திய பருத்தி கழகத்திடம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பருத்தியை கொள்முதல் விலையில் நூற்பாலைகளுக்கு தேவையான அளவு விற்க வேண்டும்.

நிலைமை சீராகும் வரை வர்த்தகர்களுக்கு விற்கக்கூடாது எனஅரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நூற்பாலை சங்கங்களுக்கு நூல் விலையை குறைக்க வேண்டும் என்றும், நூல் விலையை அடிக்கடி உயர்த்தாமல் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், மாதம் ஒரு முறை மட்டுமே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், ஆடை உற்பத்தியாளர்களுக்கு தாமதமின்றி குறித்த நேரத்தில் நூல் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், நிலைமை சீராகும் வரை நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஆதரவுடன் வரும் 13 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

You'r reading மார்ச் 13ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை