10 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை – கோவில் திருமணங்களுக்கு புதிய கட்டுபாடு!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தொடங்கி நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக ஓரளவு கட்டுபாட்டில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பானது, மீண்டும் ஏகிற தொடங்கியிருக்கிறது. இந்த கொரோனா பெருந்தோற்றை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக அண்மையில் இரவு 11 மணி வரை 50% ஊழியர்களுடன் கடைகள் நடத்தப்பட வேண்டும். மால்கள், வழிபாட்டு தலங்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனொ தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுபாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் மண்டபங்களில் திருமணம் செய்யும் பட்சத்தில், 50 நபர்களுக்கு மேல் அந்த திருமணத்தில் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிரதமர் மோடி கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பிறகு புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds