வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு!

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து உடன் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது சர்ச்சையானது. இதில், தேர்தல் பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்றும் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்ட்ட இயந்திரம் பழுதான விவிபேட் இயந்திரங்கள், இவை பயன்படுத்தப்படவில்லை என்றனர்.

இதனிடையே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. தேர்தல் அதிகாரி பிரகாஷ் சம்மந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.


இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்தநிலையில், சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds