தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், வேளச்சேரி - தரமணி சாலையில் மூன்று பேர் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனங்களில் கொண்டு செல்வதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தேர்தல் பணியில் உள்ள சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட இயந்திரம், வேளச்சேரி டி.ஏ.வி பள்ளியில் 92ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார். 50 நிமிடங்கள் அவை பயன்படுத்தப்பட்ட பிறகு பிரச்னை ஏற்பட்டதால், அவை மாற்றப்பட்டதாகவும், அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்தல் வரும் சனிக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே. அசோக்கும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.எம்.எச். ஹசனும் போட்டியிடுகின்றனர் .

540 வாக்குகள் கொண்ட அந்த வாக்குச்சாவடியில், 220 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds