2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்

by Ari, Apr 19, 2021, 07:49 AM IST

தென்காசி அருகே 2 வது கணவனை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் அபி என்ற அபிராமி . அழகு நிலையம் வைத்து நடத்தி வரும் இவர், முதல் கணவர் இறந்ததையடுத்து, கடந்த 4 வருடங்களுக்கு முன் 19 வயது இளைஞரான காளிராஜ் என் மெக்கானிக்கை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து காளிராஜை காணவில்லை.

இதையடுத்து, தனது மகனை கடந்த மூன்று வருடமாக காணவிலை என காளிராஜின் தாய் உமா தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் அபிராமியை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காளிராஜை திருமணம் செய்து கொண்ட நிலையில் அபிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. காளிராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் அபியின் வீட்டில் மாரிமுத்து உல்லாசமாக இருந்தநிலையில், ஒருநாள் திடீரென வீட்டிற்கு வந்த காளிராஜிக்கு விஷயம் தெரிந்துள்ளது. அப்போது காளிராஜுக்கும் மாரிமுத்துவுக்கும் ஏற்பட்ட சண்டையில், மாரிமுத்து தாக்கியதில், காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் மாரிமுத்து, நண்பர்கள் இருவர் உதவியுடன் அபியின் வீட்டில் உள்ள தென்னை மரத்திற்கு அடியில் காளிராஜின் சடலத்தை புதைத்துள்ளனர்.

இதையடுத்து , காவலர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது, காளிராஜின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அபிராமி, கள்ளகாதலன் மாரிமுத்து மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You'r reading 2 வது கணவனை கொலை செய்து கள்ளக்காதலனுடன் உல்லாசம் Originally posted on The Subeditor Tamil

More Tenkasi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை