தென்காசியில் கரும்புடன் வந்து விவசாயிகள் போராட்டம்

by Balaji, Dec 10, 2020, 18:36 PM IST

விவசாயிகளுக்குத் தனியார் சர்க்கரை ஆலை தரவேண்டிய 24 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கரும்புடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அதில் உள்ள தரணி சர்க்கரை ஆலையில் கடந்த ஒரு வருட காலமாகக் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை சுமார் 24 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை .

இது குறித்து விவசாயிகள் பலமுறை அரசிடம் முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லாததால் இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

You'r reading தென்காசியில் கரும்புடன் வந்து விவசாயிகள் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tenkasi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை