கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் - ஆர்டிஐயில் அம்பலம்!

தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் முன்களபணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த முடியாமல், மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் இருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. கொரோனா தடுப்பூசிகள் 10 டோஸ் அல்லது 20 டோஸ் என்று ஒரு குப்பியில் வரும்.

ஒரு குப்பியை திறந்த பிறகு நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து டோஸ்களும் போடப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் மாலையில் முடியும் போது கூடுதலாக தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படாமல் இருந்தால் அவை அடுத்த நாளுக்காக எடுத்து வைக்க முடியாது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன.

தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மேலும் 8, 82,130 கோவாக்சின் வந்துள்ளன. மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இன்று மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தமிழகம் வரவுள்ளன. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி வீணாகுதல் சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds