முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிய நிலையில், அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக அனுமதித்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே தினம் கடந்த ஆண்டு இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதாவின் மறைவை பெரும் பரபரப்புக்கு இடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெயலலிதாவின் மரணச் செய்தியை கேட்டு தமிழகமே இருளில் மூழ்கியது. ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் பார்வைக்காக வாலாஜா சாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவை காண அங்கு லட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதா, அவரது மரணத்திற்கு பிறகும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம், சசிகலாவின் புதிய அவதாரம், முதல்வராக பதவி ஏற்ற ஓ.பி.எஸ் சில தினங்களில் ராஜினாமா, அதிமுக இரண்டாக உடைந்தது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இழுபறி, என அடுத்தடுத்த திருப்பங்கள் தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்தது.
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆன நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இன்று மவுன பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.பிக்கள்., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வாலாஜா ரோடு, விருந்தினர் மாளிகை வழியாக, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு குவிந்த பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றர்.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds