இனி குடிக்கவே மாட்டேன்.. இறுதிச்சடங்கில் கதறிய தினேஷின் தந்தை

May 4, 2018, 08:30 AM IST

என் மகன் எவ்வளவோ கூறியும் நான் கேட்கவில்லை.. என் மகனுக்காக இனி நான் குடிக்கவே மாட்டேன் என்று தற்கொலை செய்துக் கொண்ட தினேஷின் தந்தை கதறி அழுத காட்சி மனதில் கனத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவன்(17). ப்ளஸ் 2 தேர்வு எழுதியுள்ள தினேஷ் நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தூத்துக்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அப்போது, அவரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில், தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தற்கொலை செய்துக் கொள்கிறேன். நான் இறந்தப்பிறகாவது தந்தை குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் தமிழக அரசு மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்று எழுதியிருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தினேஷின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்தனர். அப்போது, மகனின் உடலை பார்த்து மாடசாமி குடிப்பழக்கத்தால் இன்று நான் என் மகனை இழந்துவிட்டேன் என்று கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பின்னர் மாடசாமி கூறியதாவது: குடிப்பழக்கத்தை கைவிடும்படி எனது மகன் என்னிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்தான். ஆனால், என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதன் விளைவால், டாக்டராக வேண்டிய எனது மகனை இழந்து தவிக்கிறேன். எனது சகோதரர்கள் நல்ல முறையில் அவனை படிக்க வைத்தனர். அவன் இந்த துயர முடிவை எடுக்காமல் வாழ்ந்து காட்டிருக்க வேண்டும். என் மகனின் விருப்பப்படி நான் இனி குடிக்க மாட்டேன். அப்போது தான் அவனது ஆன்மா சாந்தி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இனி குடிக்கவே மாட்டேன்.. இறுதிச்சடங்கில் கதறிய தினேஷின் தந்தை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை