ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் திடீர் ஆய்வு! பின்னணி என்ன?

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்.

அதிமுக-வின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள பதவி வகித்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில், தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தவரும் அவரே.

கடந்த 2016, மே மாதம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறி மீண்டும் முதல்வராக ஆட்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து ஓ.பி.எஸ் முதல்வராக்கப்பட்டார். பின்னர், சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக ஆனது, டிடிவி-யின் அரசியல் ரீ-என்ட்ரி,ஓ.பி.எஸ்-ஸின் தர்மயுத்தம், சசிகலாவின் சிறைவாசம், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பு, அதிமுக இரு அணிகளாக பிரிவு, டிடிவி தினகரன் கைது, நடராஜன் இறப்பு, சசிகலா குடும்பத்தில் பிளவு என ஜெயலலிதா இல்லாத இந்த இரண்டு வருடங்களில் அதிமுக பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது.

ஆனாலும், ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தது தமிழக அரசு. மேலும், மெரினா கடற்கரையில் அவரை அடக்கம் செய்த இடத்தில் பிரமாண்ட நினைவிடம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். நீட் தேர்வு சர்ச்சையால் தமிழக அரசு ஒரு புறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஓ.பி.எஸ்.ஸின் இந்த திடீர் விசிட் எதற்காக என்ற கேள்வி அரசியல் தளத்தில் எழுந்துள்ளது.

எது எப்படியோ, `ஒரு தண்டனை பெற்ற குற்றவாளிக்கு எப்படி அரசு சார்பில் நினைவிடம் அமைக்கலாம்’ என்ற கேள்வி மட்டும் எதிர்கட்சிகளிடமிருந்து ஓய்ந்தபாடில்லை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds