தூத்துக்குடியில் கலவரம் தடியடி-துப்பாக்கி சூடு... (வீடியோ)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பகுதி போர்க்களமாக மாறியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதல் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, போராட்டத்தை தடுக்க முயன்ற போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்ட குழுவினர் பேரணிய சென்றதால் போலீசார தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர், போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால், தூத்துக்குடி மாவட்டம் கலவர பூமியாக மாறியது.
போலீசாரின் தடியடியால் பலரது மண்டை உடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர், உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தூத்துக்குடியில் கலவரம் தடியடி-துப்பாக்கி சூடு... (வீடியோ) Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News