துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

May 24, 2018, 22:17 PM IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போராட்டக்களத்தில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் ” என்று அறிவித்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை