நெய்வேலியில் விஷம் குடித்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

விஷம் குடித்த நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

by Suresh, May 28, 2018, 13:29 PM IST

கடலூரின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுள் பெருமபான்மையானவர்கள், தங்களது நிலத்தினை என்.எல்.சி.க்காக வழங்கியதற்காக ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில், இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்களில் சிலர் நெய்வேலி சுரங்கம் 1ஏ முன் மறியல் செய்வதற்காக வந்தனர். அவர்கள் பணியிட மாற்றம் செய்யாமல் தொடர்ந்து அதே இடத்தில் பணி வழங்க கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களில் 25 பேர் கொண்டு வந்திருந்த விஷத்தினை திடீரென குடித்துள்ளனர். அவர்களை உடனிருந்தவர்கள் தடுக்க முயன்றனர் அதற்குள்ளாக அவர்கள் குடித்துவிட்டனர். தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பெறுவோரில் பாஸ்கர், ஜோசப், குமார், ஜெயராஜ், மற்றும் வினாயக மூர்த்தி ஆகியோரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நெய்வேலியில் விஷம் குடித்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை