ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது - முதலமைச்சர்

சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய போது, போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதகாவும், யார் நினைத்தாலும், எப்போதுமே ஆலையை திறக்க முடியாது என்று உறுதிபட கூறினார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பொதுமக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு மற்றும் நீர் தேர்வுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் போட்ட அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு குறுக்கிட்டு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு, நீட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதால் பேரவையில் தீர்மானம் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையின் அனுமதியை ரத்து செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், ஆகையால் பேவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என விளக்கமளித்தார.

மீண்டும் குறுக்கிட்ட ஸ்டாலின், அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு ஆலை நிர்வாகம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறினார்.

அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாகவே தற்போது தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்கும் என்று தெரிவித்தார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds