நம்ம ஊர் சாமிக்கு நன்றி சொல்லுங்க கமல் - தமிழிசை
காவிரி நீர் திறக்கப்பட்ட விவகாரத்தில், நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல நம்ம ஊர் சாமிக்கு தான் என கமல்ஹாசனுக்கு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியிடம் அணை திறப்பு பற்றி பேசி இருந்தேன்."
"கபினி அணையை திறக்கப்பட்டதன் மூலம், காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்ல நட்பு தான் மூடிக்கிடக்கும் பல கதவுகளை திறக்கும்" எனக் கூறியுள்ளார்.
இதற்கு சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, "காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, நம்ம ஊர் சாமிக்கு. கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை. ஆண்டவன் ரங்கநாதர் கொண்டுவந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
You'r reading நம்ம ஊர் சாமிக்கு நன்றி சொல்லுங்க கமல் - தமிழிசை Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News