தோட்டத்துக்கு சென்ற பெண்ணை விழுங்கிய 23 அடி நீள மலைப்பாம்பு

Jun 16, 2018, 18:15 PM IST

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது உடல் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற திபா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த திபாவின் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

அப்போது, நேற்று திபாவை தேட முயன்றபோது, 23 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள், அந்த மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்ததனர். அதில், திபாவின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் திபாவின் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர். அப்பகுதியில், மலைப்பாம்பு நடமாட்டம் என்பது சாதாரணம் என்று அப்பகுதி மக்கள் கூறினாலும், ஒரு முழு உடலையே உள்ளே விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது.

You'r reading தோட்டத்துக்கு சென்ற பெண்ணை விழுங்கிய 23 அடி நீள மலைப்பாம்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை