ஒக்கி புயலால் பாதித்தவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்

கன்னியாகுமரி: ஒக்கி புயலால் பாதித்தவர்களை இன்று நேரில் சந்தித்த ராகுல் காந்தி, ஆட்சியில் இல்லாவிட்டாலும் மீனவர்களுக்காக குரல் கொடுப்போம் என ஆறுதல் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி ஒக்கி என்ற புயல் பயங்கரமாக வீசி பேரிழப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால், பொருளிழப்பு மட்டுமின்றி, மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை முதல்வர் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்த ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ள ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு, கேரள வந்தார். அங்கு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், அங்கிருந்து 1 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அங்கிருந்து, சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி கடலுக்கு சென்று இதுவரை கரை திரும்பாத மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் ராகுல் காந்தி கூறியதாவது:

மிகுந்த துக்கத்தோடு இங்கே வருகை தந்துள்ளேன். மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பின் வலியை அறிய முடிகிறது. குஜராத் தேர்தலால் கன்னியாகுமரிக்கு வர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் அவர்களிடம் உங்களுக்காக குரல் கொடுப்போம். மீனவர்களுக்கென தனி அமைச்சகம் இருந்திருந்தால் உங்களது பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds