யார் அறிவாளி ? தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி ராமதாஸ்

by Isaivaani, Jun 27, 2018, 19:40 PM IST

நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன்.. நீங்கள் பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தீர்கள்.. யார் அறிவாளி என்று விவாதம் நடத்த நான் தயார் என்று தமிழிசையின் சவாலை அன்புமணி ராமதாஸ் ஏற்று அறிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது குறித்து தமிழிசைக்கும் அன்புமணி ராமதாசுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது.
இதைதொடர்ந்து, தலைவராக இருக்க எனக்கு தகுதி இருக்கிறதா என்று அன்புமணி கேட்கிறார் என்று தமிழிசை கூறினார். மேலும், 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால் தான் தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறேன் என்றும் யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த தயாரா என தமிழிசை அன்புமணிக்கு சவால் விடுத்தார்.

சவாலை ஏற்றுக் கொண்ட அன்புமணி ராமதாஸ் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார். “நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். அதனால், தமிழிசை தான் அறிவாளி என்பதை நானே ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும், யார் அறிவாளி என்று விவாதம் நடத்த நான் தயார்” என அன்புமணி கூறியுள்ளார்.

You'r reading யார் அறிவாளி ? தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை