அமித் ஷாவின் வருகை... தாமரை தானாக மலரும் - தமிழிசை
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும்
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், அவரை வழி அனுப்பி வைப்பதற்காக சென்னை விமான நிலையத்திற்க வந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு உண்மையல்ல” என்று கூறினார்.
“புள்ளி விவரங்கள் இல்லாமல் அமித்ஷா எதையும் பேசமாட்டார். வார்டு வாரியாக தேர்தலுக்கு வேலை செய்ய நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு சிறந்த பலன் தேர்தலில் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.
மேலும், “அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளதாகவும், இந்த மழையால் குளங்கள் நிரம்பும் என்றும் குளங்கள் நிரம்பினால் தாமரை தானாகவே மலரும்” என்றும் கூறினார்.
You'r reading அமித் ஷாவின் வருகை... தாமரை தானாக மலரும் - தமிழிசை Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News