கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Jul 11, 2018, 08:51 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்கிளல் தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, இன்று கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை