தென் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Jul 23, 2018, 21:22 PM IST

தென் இந்தியாவில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும் அல்லது மிதமான மழையும் பெய்து வருகிறது.

இன்றைய வானிலை செய்தி அறிக்கையை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யலாம்” என அறிவித்திருந்தது.

இந்நிலையில், “தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு. தெலங்கானா, கோவா, சத்தீஸ்கர், உ.பி. ஹரியானாவில் கனமழைக்கு வாய்ப்பு. ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, நாகாலாந்து, மணிப்பூர், கர்நாடகா, கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு” என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

You'r reading தென் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை