வண்டலூர் பெண் சிங்கம் ஜெயா- பெயர்சூட்டி மகிழ்ந்த எடப்பாடி

Jul 24, 2018, 12:56 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்றுக்கு 'ஜெயா' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

செந்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் நடைபெற்ற ஒரு விழாவுக்கு தலைமை ஏற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அங்கு விழாவில் புதிதாகப் பிறந்துள்ள பெண் சிங்கக்குட்டி ஒன்றுக்கு பெயர் சூட்டும் விழாவும் ஏற்பாடாகி இருந்தது.

இதையடுத்து பெண் சிங்கக் குட்டிக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக ஜெயா எனப் பெயர் சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல விலங்குகளுக்கும் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதலமைச்சர். அப்போது அவர் பேசுகையில், "வருகிற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக கட்சி தயாரகி விட்டது. இதற்கானப் பணிகளை அதிமுக கடந்த வாரமே தொடங்கிவிட்டது" எனக் கூறினார்.

You'r reading வண்டலூர் பெண் சிங்கம் ஜெயா- பெயர்சூட்டி மகிழ்ந்த எடப்பாடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை