வழக்கு தொடர்ந்த நடிகர் ஆர்யா!- மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு

Jul 24, 2018, 13:15 PM IST

நடிகர் ஆர்யா தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடித்த படம் அவன் இவந். இயக்குநர் பாலா இயக்கத்தில் விருதுப் படமாக அறியப்பட்ட இப்படத்தில் ஜமீந்தார் ஒருவரைக் கேலி செய்யும் வகையில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஜமீன் பரம்பரையையும், அங்குள்ள வழிபாட்டு, ஊர் வழக்க முறைகளையும் கேலி செய்யும் வகையில் உள்ளது என அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கு முற்றிலும் சுய விளம்பரத்துக்காகத் தொடரப்பட்டது என்றும் இதனால் தன் மீது உள்ள இவ்வழக்கை நீக்க வேண்டும் என்றும் நடிகர் ஆர்யா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பான மனுவை அளிக்கவே இன்று மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளைக்கு வந்திருந்தார் நடிகர் ஆர்யா. இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading வழக்கு தொடர்ந்த நடிகர் ஆர்யா!- மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை